60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில், கடந்தாண்டு நடந்த, "குரூப்-1" முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,), துணை கலெக்டர் பணியிடங்கள் 56, (இதில் 23, எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலியிடம்), டி.எஸ்.பி., பணியிடங்கள், 29, உதவி வணிகவரி அலுவலர் பணியிடங்கள், 28, மாவட்ட பதிவாளர் பணியிடங்கள், 7, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பணியிடங்கள்,10, கோட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடம் 1 என 131 காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டது.
இப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு, கடந்தாண்டு ஜூன் 6ம்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை, 90 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து, முதல் நிலை தேர்வுக்கான முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
இந்த முதல்நிலை தேர்வில், 2 ஆயிரத்து 795 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு வரும், ஜூன் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தேர்வு ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
564 மாணவர்கள் தேர்வு: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, குரூப் - 1 தேர்வில், சைதை துரைசாமி மனிதநேய பயிற்சி மையத்தில் பயின்ற, 564 மாணவ, மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும், முதன்மைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து, இலவசமாக நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன், நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும், தொடர்ந்து நேர்முகத் தேர்வு வரை, முழுமையான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive