Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!

        ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.

வங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா? உங்களுக்கு சலுகை காத்திருக்கிறது

       வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

NHIS 2014 for Pensioners

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners - Form

DSE: SG to BT Promotion 530 பேருக்கு

            பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு


2014 ஜூலை மாத நாட்காட்டி


01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்

05-குறை தீர் சிறப்பு முகாம்

ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.



         குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் -கொடைக்கானல் ஒன்றியம்- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

    *தொடக்கக்கல்வித்துறை* திண்டுக்கல் மாவட்டம் -கொடைக்கானல் ஒன்றியம்- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

Thanks to-Mr.Veeraramprabu Thilagar
1.சின்னூர் -1.
2.பெரியூர்-1.

பொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்?


       பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரைகால தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த நாட்களை ஈடுகட்ட இரவு 10:00 மணி வரை கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே

          மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்

         ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர் தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடை எழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர்.
 

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு

         பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில் 3 பேர் இடைநீக்கம்

       ராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மூவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம்

        சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது) மற்ற மாவட்டங்கள் பற்றிய காலிப்பணியிடங்கள் விவரம் தொகுத்து எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பினால், அம்மாவட்ட விவரம் வெளியிடப்படும்.

Special TET: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம்

    மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி


உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

         அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, வேலை பார்த்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண்ணை வழங்காத, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 'அஞ்சல் வழியில் படித்தவர்கள், திறந்த நிலை பல்கலையில், எம்.பில்., படித்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பட்டபடிப்புக்குப்பின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவருக்கும் பதவி உயர்வு!

       இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு:சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு!


     எளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். 'கோவேறு கழுதைகள்', 'செடல்', 'மண்பாரம்' எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார்.

TRB தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

      TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

        டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது
 

ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த கவுன்சிலிங்:பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

          ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்த, முதல்கட்டமாக, ஆசிரியர்களுக்கு "கவுன்சிலிங்' தர, பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
 

10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ

         இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அடு்த்த படியாக பாகிஸ்தான், இந்தோனேஷியா நாடுகள் இடம் பிடித்துள்ளது.
 

பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு

          மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.

நாளை குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்:

          நாளை நடைபெறும் குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை நடத்துகிறது.
 

மாணவ-மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடியில் இலவச சைக்கிள்:

            மாணவ - மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவிகள் அனைவருக் கும் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் (2014-2015) ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ - மாணவிகளுக்கு ரூ.230 கோடியே 72 லட்சம் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 மாணவ - மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல்:

         தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இலவச பாடபுத்தகங்களின் முதல் பக்கத்தில் விலை இல்லா பாடநூல் என்பதை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

திருப்பூரில் மாணவி தற்கொலை!

       திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி அரசு பள்ளி மாணவி சுவாதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கணக்கு ஆசிரியை பிரியா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகர் 2வது வீதியை சேர்ந்த மனோகரன் - சுசீலா தம்பதியின் மகள் சுவாதி (18), வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

NHIS - 2014

          MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Provision of Health Care Assistance to the Pensioners (including spouse) / Family Pensioners through the United India Insurance Company Limited, Chennai – Implementation – Orders – Issued.

பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை

       பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர்.
 

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

           அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

High School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

       உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு திராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

          +2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
 

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

         மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

'குரூப் 2' தேர்விற்கு கடும் போட்டி இருக்கும்

ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்

          தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800 உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன் 29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில் நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும் விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர்.


டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

       அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive