மாணவ-மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடியில் இலவச சைக்கிள்:

            மாணவ - மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவிகள் அனைவருக் கும் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் (2014-2015) ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ - மாணவிகளுக்கு ரூ.230 கோடியே 72 லட்சம் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 மாணவ - மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

         இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் அருள்மொழி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அசோக் டோங்ரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையே, வேளாண்மை துறைக்கு ரூ.202.25 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நெல் நடவு இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive