NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்

         முதன்மைக்கல்வி அலுவலகத்தில்கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம்ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
 
           இதற்காக, மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில்உள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் நேற்று காலை, 9:00மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். வெகு நேரமாகியும் கலந்தாய்வு துவங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "காலை 9:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என,அறிவிக்கப்பட்டது. ஆனால், மாலை 5:00 மணி வரை துவங்காததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். கலந்தாய்வு முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வோம்'என்றனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கம்ப்யூட்டரில் "சர்வர்' இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், குறிப்பிட்டநேரத்திற்கு கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. என்றனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive