Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar

           தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள்  நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்,  அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை  ஆகியவற்றை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
 

TET பணிநியமன அறிவிப்பு அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் வரும்!

            ஆசிரியர் தகுதிதேர்வில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இடஒதுக்கீட்டுக்கு எதிராண அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது 

TET பணிநியமன தடை நீங்கியது

          TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி  செய்யப்பட்டது.


GPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

       தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள்  வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Mahathma Gandhi மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - Sep. 22

     தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால்  மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.

அரசு மருத்துவமனைகளுக்கு 2,176 புது டாக்டர்கள் வாரியம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க முடிவு

       தமிழகத்தில், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள, 2,176 டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, நேரடி தேர்வு நடத்தி  நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க உள்ளது.
 

PHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி!!

       ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

CTET மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வு

       மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு, கோவையில் நான்கு மையங்களில் நேற்று நடந்தது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உட்பட பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 

ஐஏஎஸ் தேர்வு எழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி

        29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண் களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 
 

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!

இந்தியாவின் மிக உயர்ந்த விருதுபாரத ரத்னா
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருதுகாந்தி அமைதி விருது
அமைதிக்கான மிக உயர்ந்த விருதுஅசோக் சக்ரா விருது

ஆசிரியர் நியமனத்தில் கமிஷன்? பணத்தை திருப்பித்தரும் இடைத்தரகர்கள்- இந்து தமிழ்

         ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளில் புரியாத பாடங்களை அனிமேஷன் படங்கள் மூலம் புரியவைக்கும் முயற்சி!

     அல்ஜீப்ரா, அணு அமைப்பு மற்றும் இலக்கணம் உள்ளிட்ட பாடங்களை, மாணவர்களுக்கு புரியும்படி விளக்கும் வகையில், அனிமேஷன் படங்களை, தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கவுள்ளனர்.


தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்

        தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்

           சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்தகப் பையை உயிராக நினைத்த காஷ்மீர் சிறுவன் : உயிரைப் பணயம் வைத்து மீட்டுக் கொடுத்த மீட்பு படை

           ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், தான் உயிராக நினைத்த புத்தகப் பையை தேசிய மீட்புப் படையின் உதவியுடன் மீட்டுள்ளான் பத்து வயது சிறுவன்.

TET வழக்கில் தீர்ப்பு எப்போது?

                     டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.

          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல் சிபாரிசு இல்லையா:ஐகோர்ட் அதிருப்தி


           உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நடக்கவில்லை,' என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் விசாரணை அறிக்கையில், மதுரைஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தியடைந்தார்.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு:

அரசு தொடக்க பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்-கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர்


          “அரசு தொடக்க பள்ளிகளில், அக்டோபர் இறுதியில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்று கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் கூறினார்.

பிளஸ்2 காலாண்டுத்தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திணறல்

         பிளஸ்2 கணித தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திண்டாடினர்.

ஐந்து பாடங்களுக்கான உதவி பேராசிரியர் பணி இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

              ஐந்து பாடங்களில், உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள, 1,096 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தியது. 

தட்டச்சர் பணியிடங்களுக்கு இன்று பணி நியமன கவுன்சலிங் நடக்கிறது!.

          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர் பணியிடங்களுக்கு   நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நபர்களுக்கு இன்று பணி நியமன கவுன்சலிங் நடக்கிறது.20132014ம் ஆண்டுக்கான தட்டச்சர் காலிப் பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 213 பேர் பள்ளிக் கல்வித்துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

TET ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை

            ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே    கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.

மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்தேர்வுத்துறை உத்தரவு...

       
          காரைக்குடி:கடந்த 2013-ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்'  எனப்படும், இரு வினாத்தாள் முறை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த,மேல்நிலைக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலை தேர்வு நடத்த மூவர் குழு : ஆசிரியர்கள் கோரிக்கை..

          மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும், என  ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் சிவகுமார் வரவேற்றார். 

CTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு

         சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர்  தகுதித்தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.

பல்கலை. படிப்புகளில் வெளிநாட்டினரைச் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி புதிய உத்தரவு

            இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) அனுமதி பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to Get Loan For Starting Business?

தொழில் கடன் பெற என்ன ஆவணங்கள் தேவை?

            தமிழக அரசின் யு.ஒய்..ஜி.பி. திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான அடிப்படை தகுதிகள், வங்கிக் கடன் விவரம் ஆகியவை குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் .ராசு.

கல்லூரி மாணவர்கள் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கண்காணிப்பு

           கல்லுாரி மாணவர்கள் செல்லும் சில வழித்தட பேருந்துகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் கல்லுாரி மாணவர்கள் பேருந்தில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அப்பாவி பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறைக்கு, புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இடைநிலை ஆசிரியர் நியமனம் - குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் நியமனம் - 1987க்கு பிறகு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2 என்பதற்கான அரசாணை

 

நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல்

            பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு 

TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

             வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த வழக்கில்  தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம்  ‘வெயிட்டேஜ்’ முறையை  பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ்  முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி  பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய  படிப்புகளின் பெற்ற  மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு  செய்யப்படுகின்றனர். 

10th Latest Study Material

Science Study Material

High School HM Promotion Case இன்று மதுரை நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

        COURT NEWS 19.09.14 :HIGH SCHOOL HM PROMOTION CASE AT MADRAS HIGH COURT

COURT NEWS 19.09.14 :HIGH SCHOOL HM PROMOTION CASE AT MADRAS HIGH COURT

409. WP.15925/2014 MR.R.SASEETHARAN M/S.SPL. G.P. FOR RR1 AND R2
(Service)
AND To Dispense With

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive