Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ல் துவக்கம்

         பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது. இந்நிலையில், பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.

முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை

       அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும் மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.

ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பம்

         புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னையில் 3 மாணவர்களுக்கு அறிகுறி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 50ஆயிரம் தடுப்பு ஊசி

       நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்

           தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. 
 

குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் - இயக்குனர் உத்தரவு

          தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

       பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
 

பத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்கான வழிகள்; K.பழனிசாமி, J.முருகன், தருமபுரி

       நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால், நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த அழுத்தத்தை திணிக்க முயல வேண்டாம் : வைகோ

         தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து, வருங்காலங்களில் பத்து கி.மீ என்ற தூரத்தை ஏழு கி.மீட்டராக குறைக்க வலியுறுத்தல்

   eilbgw cŸs g‹åu©lh« tF¥ò bghJ¤nj®éš  miw f©fhâ¥ghs® ãakd¤Âš gšntW kh‰w§fis Ï›th©L muR nj®ÎfŸ Jiw òF¤ÂaJ .M©L njhW« nkšãiy¥ bghJ¤nj®Î,g¤jh« tF¥ò bghJ¤nj®Îfëš miw¡f©fhâ¥ò gâfë‹ nghJ njitahd Ïl§fëš gâah‰¿l MÁça®fŸ gšntW Ka‰ÁfŸ brŒt®.Mdhš Ï›th©L muR nj®Î¤ Jiw  nj®Îfëš kªjd j‹ikia fU¤Âš bfh©L òÂa Kiwia òF¤ÂÍŸsJ.

'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி : டி.ஆர்.பி.,க்கு கடும் எதிர்ப்பு

          'அரசுப் பள்ளிகளில், 652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' என, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு நடக்காத நாட்களில் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வு நடத்த முடிவு

       பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 5) துவங்கி, மார்ச் 28ல் முடிவடைகிறது. இதற்கிடையில் மார்ச் 7,14, 21(சனி) 8, 15, 22 (ஞாயிறு) வார விடுப்பு நாட்கள் வருகிறது. மார்ச் 11, 12, 17, 19, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பிளஸ் 2 தேர்வுகள் இல்லை. அந்த நாட்களில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

          வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
 

மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டம்

          பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் உருவாக்கும் 9  செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
 

எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போலீஸ் தவிப்பு: தடையில்லா சான்று தருவதில் இழுத்தடிப்பு

          போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தடையில்லா சான்று தர அதிகாரிகள் இழுத்தடிப்பதால் போலீசார் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை

           பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 

ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள்

        தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.

CPSல் சேர்ந்த ஆசிரியர் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்று உயர்நிலை பள்ளிக்குச் சென்றவர்களின் cps கணக்கினை தொடர்வது குறித்து - RTI தகவல்.

       பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்று உயர்நிலை பள்ளிக்குச் சென்றவர்களின் cps கணக்கினை தொடர்வது குறித்து - அரசு தகவல் தொகுப்பு மையம் அளித்த RTI தகவல்.

                     

தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

        தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் 34 பேர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

         சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 4) வெளியிடப்பட உள்ளன.
 

மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு

          டி.ஆர்.பி., சார்பில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
 

'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி : டி.ஆர்.பி.,க்கு கடும் எதிர்ப்பு

         'அரசுப் பள்ளிகளில், 652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' என, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை

          பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
 

மாநகராட்சி பள்ளிகள் ...வளர்ச்சிக்கு திட்டம் தேவை

         சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகள் தனியார் மயம் ஆகாது என, மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறமையான எழுத்தர்களை நியமிக்க கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

         எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறமையான எழுத்தர்களை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

        தமிழகத்தில் ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. செயலாளர் நிலையில் உள்ள அவர்களுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்தியில்,

14/3/2015 CRC for Pry & Up Primary Teachers

குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் 14/3/15 அன்று குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது

மாற்றம் காணும் மார்ச் 8;- முத்துப்பாண்டியன்

மாற்றம் காணும் மார்ச் 8 இனிய தோழனே!

          ஒவ்வொரு போராட்ட காலத்திலும் உன்னை உரிமையோடு போராட்ட களத்திற்கு அழைப்பதை வாடிக்கையாக கொண்டள்ளேன். நீயும் உணர்வோட அதில் கலந்துள்ளாய். தனிச்சங்க நடவடிக்கையில் கூட உன் வரவு வட்டார, மாவட்ட, மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்தது.
 

TET வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டு பணியை இழந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு...

            கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்; தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்று 2014 ஜனவரி  மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வெய்ட்டேஜ் என்னும் முறையினாலும் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வினாலும் பாதிக்கப்பட்டு பணிநியமனத்தை இழந்த  

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்


         தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் வழங்கும் தொலைபேசி அழைப்பு வசதி


         பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, மொபைல் போன்களில் இயங்கும் வாட்ஸ் அப் மூலம், வாய்ஸ் கால் (Voice Call) வழியாக, மற்ற தொலைபேசிகளை அழைத்துப் பேசலாம். இதற்கெனத் தனி கட்டணம் தேவை இல்லை.
 

12th Standard English Medium - Free Online Tests

Maths

Unit 1 -Applications of Matrices & Determinants
Unit 2 -Vector Algebra
Unit 3 -Complex Numbers
Unit 4. Analytical Geometry
Unit 5 -Differential Calculus Applications - I 
Unit 6. Differential Calculas - Applications II
Unit 7. Integral Calculus And Its Applications
Unit 8. Differential Equations
Unit 9. Discrete Mathematics
Unit 10. Probability Distributions

Physics

Unit 1 - Electro Statics
Unit 2 - Current Electricity
Unit 3 - Effects Of Electric Current
Unit 4 - Electromagnetic Induction
Unit 5. Electromagnetic Waves And Wave Optics
Unit 6. Atomic Physics
Unit 7. Dual Nature Of Radiation And Matter And Relativity
Unit 8. Nuclear Physics
Unit 9. Semiconductor Devices And Their Applications
Unit 10. Communication Systems

Chemistry 
Unit 1. Atomic Structure - II
Unit 2. Periodic Classification - II
Unit 3. P-Block Elements
Unit 4. D-Block Elements
Unit 5. f-Block Elements
Unit 6. Coordination Compounds And Bio-Coordination Compounds
Unit 7. Nucler Chemistry
Unit 8. Solid State - II
Unit 9. Thermodynamics II
Unit 10. Chemical Equilibrium - II
Unit 11. Chemical Kinetics - II
Unit 12. Surface Chemistry
Unit 13. Electro Chemistry
Unit 16. Hydroxy Derivatives
Unit 17. Ethers
Unit 18. Carbonyl Compounds
Unit 19. Carboxylic Acids
Unit 20. Organic Nitrogen Compounds
Unit.21 - Biomolecules
          
Biology
(Bio - Botany)
Unit 1 - Taxonomy of Angiosperms
Unit 2 - Plant Anatomy
Unit 3 - Cell Biology and Genetics
Unit 4 - Biotechnology
Unit 5 & Unit 6. - Plants Physiology, Biology in Human Welfare

Botany 
Unit 1. Taxonomy Of Angiosperms
Unit 2. Plant Anatomy 
Unit 3 & Unit 4 - Cell Biology And Genetics, Biotechnology
Unit 5 & 6 - Plant Physiology & Biology in Human Welfare

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive