NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

500, 1,000 ரூபாய் தடை என்பது, திருமண வீட்டாருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

           பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் நோக்கில், தாமாக முன்வந்து கறுப்புப் பண விபரங்களை தெரிவிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, இந்தாண்டு அமல்படுத்தியது; 
 
         2016 ஜூன் 1ல் இருந்து செப்., 30 வரை, நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.இந்த திட்டத்தின்படி, கணக்கில் காட்டாத சொத்து அல்லது பண மதிப்பில், 45 சதவீதத்தை வரியாக செலுத்தி, அவற்றை தங்கள் சொத்து கணக்கில் சேர்த்து கொள்ளலாம்.
 
             மேலும் கணக்கு காட்டுபவர்களின் பெயர் வெளியிடப்படாது என, மத்திய அரசு தெரிவித்தது.இதன் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பண விபரங்கள் வெளியாகின; இத்திட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.
 
           கல்யாண வீட்டாருக்கு பாதிப்பு : இன்று முகூர்த்த நாள். ஜப்பசி மாதத்தில் இன்றும், நாளை மறுநாளும் வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அதிக திருமணங்கள் நடக்கின்றன.இந்நிலையில், 500, 1,000 ரூபாய் தடை என்பது, திருமண வீட்டாருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருமண செலவுக்கான பண பட்டுவாடாவில் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.திருமண செலவுக்காக, பணத்தை எடுத்து வைத்தவர்கள், பெரும்பாலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பர். இவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive