NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு

          ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. 
 
           அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.


இரண்டு பிரிவு

அதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் இடம் பெறுவர். அடுக்கு மாடி வீடுகளில் வசித்து, இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், முன்னுரிமை அல்லாத பிரிவில் இடம் பெறுவர். 

தற்போது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக, ஆண்கள் மட்டும் உள்ளனர். இனி, பெண்களை குடும்ப தலைவராக குறிப்பிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, தமிழக உணவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


உணவு பாதுகாப்புசட்டம்


தமிழகத்தில், 1.91 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், மத்திய தொகுப்பில் இருந்து, 'அந்தியோதயா அன்ன யோஜனா' பிரிவில், கிலோ, மூன்று ரூபாய் விலையில், 65 ஆயிரம் டன் வாங்கப்படுகிறது. 

வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65 ரூபாய்க்கு, 1.05 லட்சம் டன்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், கிலோ, 8.30 ரூபாய் க்கு, 1.26 லட்சம் டன் அரிசி வாங்கப்படுகிறது. மீதம், கிலோ, 19 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.

தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து, மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65ரூபாய்க்கு தரும் அரிசியை, மூன்று ரூபாய்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், 8.30 ரூபாய்க்கு தரும் அரிசியை, 22.50 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து உள்ளது.


எடை குறையாது


எனவே, தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்கள், முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாத வர் என, பிரிக்கப்பட உள்ளனர். இந்த விபரம், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அரிசி வாங்க மட்டும் பயன்படுத்தப்படும். 

அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், ரேஷன் கடைகளில், தொடர்ந்து குடும்ப உறுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்ப, இலவச அரிசி வழங்கப்படும்; யாருக்கும் எடை குறைத்து வழங்கப்பட மாட்டாது. 

முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக பெண்கள் நியமிக்கப் படுவர். முன்னுரிமை அல்லாத பிரிவில், ஆண், பெண், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குடும்ப தலைவராக இருக்கலாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive