NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்.பி.ஐ., 'மொபைல் பேங்கிங்' சேவை கட்டணம் உயர்கிறது

      பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,களில் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு, 25 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். 
எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் முதல், வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதித்து வருகிறது. 
அதன்படி, மாநகர பகுதிகளில், 5,000 ரூபாய்; நகரம், 2,000 மற்றும் கிராமம், 1,000 ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும்; அது குறைந்தால், குறைந்தபட்சம், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
திருத்தம் : இந்நிலையில், நேற்று மற்றொரு அறிவிப்பாக, அதன், மொபைல் போன் வழி வங்கி பரிவர்த்தனையான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யின், பயன்பாட்டில் சில திருத்தங்களை செய்துள்ளது. 
இதில், 'பிரீபெய்டு கார்டு' போல் முன்கூட்டியே, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, சேமித்து வைத்துக் கொள்ளலாம். பின், அதில் உள்ள தொகையால், பொருட்கள் வாங்கவோ அல்லது வேறு நபரின் கணக்குக்கு பணம் அனுப்பவோ முடியும். இந்நிலையில், அந்த சேவையில், ஜூன் முதல் மாற்றங்கள் செய்யப் போவதாக, எஸ்.பி.ஐ., - வங்கியியல் பிரிவு மேலாண் இயக்குனர், ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார். 
பரிவர்த்தனை கட்டணம் : அதன்படி, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் இருந்தால், அதை, ஏ.டி.எம்., மையங்களில் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு, பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். இதுதவிர, வங்கியால் நியமிக்கப்பட உள்ள வர்த்தக விரிவாக்க அலுவலர்களிடம் பணம் கொடுத்து, அதை அவர்கள், எஸ்.பி.ஐ., - 'பட்டி'யின் கணக்கில் வரவு வைக்கும் நடைமுறையும் அறிமுகமாகிறது. அவர்கள் மூலமாக, 1,000 ரூபாய் வரவு வைத்தால், அதற்கு, 2 ரூபாய் முதல், 8 ரூபாய் வரை, சேவை கட்டணம் மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.மேலும், அந்த அலுவலர்கள் மூலமாக, 'பட்டி'யில் இருந்து, 2,000 ரூபாய் வரை, ரொக்கமாக பெற விரும்பினால், அந்த தொகைக்கு, 2.5 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமும், கூடுதலாக சேவை வரியும் உண்டு. குறைந்தபட்சம், 6 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். 
அதிர்ச்சிஇந்த அறிவிப்பு, 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு மாறிய ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, பணம் 
எடுக்கும் ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, எஸ்.பி.ஐ., அறிவித்ததாக, நேற்று காலை செய்தி வெளியானது. அதனால், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், எஸ்.பி.ஐ.,க்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, அந்த செய்தி தவறானது என, எஸ்.பி.ஐ., வங்கி மறுப்பு தெரிவித்தது.
1 லட்சம் பேர் ஓட்டம்! : பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல், 1ல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த வங்கியில் வைத்திருந்த கணக்குகளை முடித்துக் கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive