NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குளு குளு கோடை காலம்

🌞 முலாம்பழத்தை கோடை காலத்தில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். முலாம்பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி,
நாட்டுசர்க்கரை மற்றும் பால் சேர்த்து, ஜூஸாக்கி பருகினால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறலாம்.

🌞 வெயில் காலத்தில் நுங்கு அருமருந்தாகும். நுங்கை தோல் நீக்கி, பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வெயிலுக்கு பருகினால் இதமாக இருக்கும்.

🌞 சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி, சிறிது பாலும், தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி, நாட்டுசர்க்கரை சேர்த்து பருகினால், இரத்தம் விருத்தியாகும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் கோடை காலத்தில் வராது.

🌞 மாம்பழத்துடன் பால் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து பருகினால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடை க்கும்.

🌞 கோடை காலத்தில் பழ வகைகள் இருந்தால், எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது சர்க்கரை, மில்க்மெய்டு கலந்து குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து, தேவைப்படும் போது எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைப் பெறலாம்.

🌞 தினமும் கோடை காலத்தில் ஐஸ்கட்டியால், முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால், முகம் பொலிவுடன் இருப்பதோடு, உஷ்ணம் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகள் வராது.

🌞 புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகைப் பொருளாகும். மேலும் இது இரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. புதினாவில் உள்ள மென்தால் உடலை குளிர்ச்சியாக உணரவைக்கும்.

🌞 கோடையில் தினமும் தயிர் பருகி வந்தால், அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை சரிசெய்யும்.

🌞 நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கறுத்துப் போய் விடும். இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive