NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.18

செப்டம்பர் 8 - உலக எழுத்தறிவு தினம்


திருக்குறள்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

விளக்கம்:

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

பழமொழி

Money makes many things

பணம் பத்தும் செய்யும்

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

விடியாத இரவென்று எதுவும் இல்லை.
முடியாத துயரென்று எதுவும் இல்லை.
வடியாத வெள்ளமென்று எதுவும் இல்லை.
வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை.

       - வைரமுத்து
 
பொது அறிவு

1.வானியல் தொலைவுகள்  எந்த அலகால் அளவிடப்படுகிறது?

 ஒளி  ஆண்டு

2. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?

மங்கள்யான்

English words and. Meanings

Application.    விண்ணப்பம்
Eraser.              அழிப்பான்
Register.           பதிவு
Submit.              ஒப்படை
Exercise.             பயிற்சி

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*பப்பாளி இலை*

1. நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.

2.டெங்கு காய்ச்சலுக்கு இதன் இலைச்சாற்றை குடித்து விரைவாக குணம்பெறலாம்.

நீதிக்கதை



 முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)


அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்கு நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.
,
அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்திருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேட்டையாடப்படும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரே நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடைக்காமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேட்டையாடி விடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ஜித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வருகிறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் லகாட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ஜித்தது.

பிம்பமும் கர்ஜித்தது. சிங்கத்திற்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூறியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

இன்றைய செய்திகள்

08.09.18

* வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ரக பருத்தி பயிர்களால் கோயம்புத்தூரில் உள்ள பருத்தி விவசாயிகள் இப்பருவத்தில் அதிக விளைச்சலை எதிர்நோக்கியுள்ளனர்.

* ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் ஈரோட்டில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான திட கழிவு உயிரி சுரங்கம் அமைக்கப்படும் என  ஆணையர் எம்.செனீ அஜ்மல் கான் கூறினார்.

* திருச்சியில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

* யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச்சுற்றுக்கு முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் ஜப்பானைச் சேர்ந்த 20 வயது நவோமி ஒசாகாவும் தகுதி பெற்றுள்ளார்கள்.

Today's Headlines

🌸 Cotton farmers in Coimbatore may be looking at better yield in a smaller area next planting season as scientist have come up with a new variety of long staple cotton🌹
🌸Erode:Corporation Commissioner M. Seeni Ajmal Khan told that under the Smart City Mission, a proposal has been submitted for bio-mining the entire  solid waste at a cost of Rs. 37 crore.🌹
🌸Trichy:A three-day Tamil Nadu State Police Games meet began here  . Police personnel from various zones are taking part in the event🌹
🌸korea:Saurabh Chaudhary shot a junior world record 245.5 to win the junior men’s gold in air pistol in the 52nd World shooting championship.💐🎖

Prepared by
Covai women ICT_போதிமரம்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive