NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவ புதிய முறை


பள்ளிப் படிப்பிற்கு பின்னர் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை கலந்தாய்வின் போதே கண்டறிந்து உதவித்தொகை வழங்க மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முடிவு செய்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் அரசின் சார்பில் தொழிற் கல்வி பயில உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின்னரே அவர்கள் செலுத்திய உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கல்லூரிகளில் சேரும்போது கல்வி கட்டணத்தை செலுத்துவதில் ஏழை மாணவர்களுக்கு பெரும் சிரமம் இருந்து வந்தது. இதனைக் களையும் பொருட்டு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போதே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் கண்டறிய உள்ளனர். இந்த புதிய முறை தனியார் கல்லூரிகளில் மேலாண்மை ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இந்த திட்டம் எந்தளவு சென்றடைகிறது என்பதை கண்காணிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive