NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"அறிவை வளர்க்க நூலகங்களை பயன்படுத்த வேண்டும்"


             "உலக அறிவை வளர்த்துக் கொள்ள, பொதுமக்கள் அனைவரும், நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.


         உலக புத்தக தினவிழாவில் பங்கேற்று, தாலுகா அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, இடைப்பாடியில், நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் மகரபூசணம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார்.

          நூலகங்களுக்கு இடையே, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசியதாவது:

                       தமிழகத்தில், கல்வியறிவை, மாணவர்களுக்கு புகட்டத்தான், எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு, கல்வித்துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்க முடியாததை, நூலகத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்.

                    நூலகங்களில் உள்ள புத்தகங்கள், மிகவும் நன்கு பயனுள்ளவை. அதனை, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive