Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உருது மொழி மாணவர்கள் தமிழில் படித்து 100% தேர்ச்சி


          உருது மொழியை தாய்மொழியாக கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழில் படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

      திருத்தணி நகராட்சி, வீரகநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தது, இஸ்லாம் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடுநிலைப் பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டது. 2011-12 கல்வியாண்டில், இங்கு, 20 மாணவர்கள் முதல் முறையாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

         இதில், 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், 27ம் தேதி முதல் மே, 12ம் தேதி வரை நடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 20 மாணவர்கள் எதிர்கொண்டனர்.

         இவர்கள் அனைவரும், உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்கள், தமிழை முதன்மை பாடமாக எடுத்து, 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில், தேர்வு எழுதிய, 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அபுபக்கர் என்ற மாணவர், 396 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive