Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன


        தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல் மையங்களை மூட பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார்.
 
        அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழக அரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
 
         பின்னர் தமிழக அரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
 
                    இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் 89 படிப்பு மையங்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 117 தகவல் மையங்களும் உள்ளன. நிதிநெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேவையில்லாமல் உள்ள தகவல் மையங்களான அரவக்குறிச்சி, வரட்டாண்டு, சேத்தூர்பேட், காங்கேயம், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணாபுரம், தேவக்கோட்டை உள்ளிட்ட 28 தகவல் மையங்களை மூட பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் உத்தரவிட்டுள்ளார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive