Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் மாயமான பள்ளிகளில் ஆங்கிலம் முதல் தாளில் "ஆல் பாஸ்"


         பத்தாம் வகுப்பு தேர்வில், மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள் வந்திருப்பது, பலரது மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கடந்த மார்ச், 28ல், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய வங்கி செலான், கேள்வித்தாளுடன் வழங்கப்படவில்லை. இதற்காக, தேர்வு எழுதிய 10.51 லட்சம் மாணவர்களுக்கும், ஐந்து மதிப்பெண்களை, தேர்வுத் துறை, சுளையாக வழங்கியது.

* பார்சலில் அனுப்பப்பட்ட தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலம் அருகே, ரயில் தண்டவாளத்தில் விழுந்து, கடும் சேதம் அடைந்தன. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள், தமிழ் முதல் தாளில் பெறும் மதிப்பெண்கள், தமிழ் இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்தது.

* ஏப்., 1ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசுமேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலம் முதல் தாள் தேர்வெழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகள், பஸ்சில் எடுத்துச் செல்லும்போது மாயமாயின. கடைசி வரை, விடைத்தாள் கட்டுகள் கிடைக்கவில்லை.

          இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள், ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கு வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்தது.

         ஆங்கிலம் முதல் தாள் மாயமான பள்ளிகளில், ஆங்கில பாடத்தில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், அரசு மேல் நிலை பள்ளியில், ஏப்ரல் 1ம் தேதி, 10ம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், சத்தியமங்கலம் அரசு மேல் நிலை பள்ளி மாணவர்கள், 176 பேர், சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 20 பேர், மேல்பாப்பாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 25 பேர் உட்பட, 221 பேர் தேர்வெழுதினர். இவர்களின் விடைத்தாள்களை, அஞ்சலக ஊழியர், திண்டிவனம் கொண்டு செல்லும்போது, காணாமல் போயின. இவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாளின் மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. நேற்று வெளியான தேர்வு முடிவுகளில், 221 மாணவர்களும், ஆங்கில பாடத்தில், தேர்ச்சி பெற்றனர்.

         சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி 84 சதவீதம், ராஜாதேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம், மேல்பாப்பாம்பாடி அரசு உயர்நிலை பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

              ஆங்கிலம் இரண்டாம் தாள் சரியாக எழுதாத மாணவர்கள், தங்கள் தேர்ச்சி பாதிக்கும் என பயத்தில் இருந்தனர். பெற்றோரும், கவலையில் இருந்தனர். ஆங்கிலத்தில், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்து, சர்ச்சைகளுக்க, தேர்வுத் துறை முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


         கணிதத் தேர்வு, மிகவும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இவ்வளவு நடந்தும், தேர்வில், இமாலய அளவிற்கு, சாதனை நிகழ்ந்தது எப்படி என்பது, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்குமே புரியவில்லை.

           அதிலும், முக்கிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 20 மடங்கு, 30 மடங்கு அளவிற்கு, "சென்டம்&' அதிகரித்திருப்பதும், அதிகாரிகளின் புருவங்களை விரிய வைத்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive