Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வு - விலக்கு யாருக்கு : தமிழக அரசு அறிவிப்பு


              ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

          தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
         ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

           தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.




1 Comments:

  1. நாங்கள் 2008-2009,2009-2010,2010-2011, கல்வியாண்டில் ஏற்ப்பட்ட பின்னடைவு பணிஇடங்கள் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியராக 17 டிசம்பர் 2012-ல் பணி நியமனம் செய்யப்பட்டோம் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2008-2009,2009-2010,2010-2011, கல்வியாண்டில் ஏற்ப்பட்ட பின்னடைவு பணிஇடங்கள் மூலம் பணி நியமனம் செய்ப்பட்ட 319 ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு மிகவும் தாழ்ந்து பணிவண்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive