Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்வெளித் துறையில் சிறந்து விளங்கும் இந்தியா: இஸ்ரோ விஞ்ஞானி


         திருநெல்வேலியில் மத்திய அரசின் அறிவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தின் விஞ்ஞானி இங்கர்சால் பங்கேற்றார்.

          நெல்லையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: விண்வெளி ஆராய்ச்சிகளில் முதலிடத்தில் உள்ளதும் சுயசார்புடையதுமான ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.

          பூமியில் ஓரிடத்தைத் துல்லியமாக வானில் இருந்து அறிய உதவும் ஜி.பி.எஸ்., பயன்பாட்டிற்காகவும், இந்தியாவின் தொலைதொடர்பு, பேரிடம் மேலாண்மை உள்ளிட்டவற்றிற்காகவும் ஐ.ஆர்.என்.எஸ்.,என்ற பெயரில் ஏழு சாட்டிலைட்கள் அடுத்தடுத்து ஏவப்பட உள்ளன.

           முதலாவது சாட்டிலைட், விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது. செவ்வாய்க்கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் செயற்கைகோளும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்படும். நிலவில் ஆராய்ச்சிக்காக ரோவர் எனப்படும் சிறிய கருவியை அனுப்புவதற்காக, சந்திரயான் 2- செயற்கைகோள் தயாரிப்பு பணியில் உள்ளது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive