Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை

          பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :தேர்வுத்துறை அறிவுரை
          பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–

செய்யக்கூடியவை பிளஸ்–2 தேர்வில் மாணவர்கள், மாணவிகள் செய்யக்கூடியவை வருமாறு:–
* விடைத்தாள் முகப்புச்சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிடவேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்திற்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுதவேண்டும்.
* விடைத்தாளின் இருபுறங்களிலும் எழுதுவது அவசியம்.
* 'ரப்' வேலைகள் அனைத்தும் விடைத்தாளின் பகுதியில் இடம்பெறவேண்டும்.
* வினா எண் தவறாமல் குறிப்பிடவும்.
* இரு விடைகளுக்கும் இடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும்.
* வினாத்தாளின் வரிசை ஏ அல்லது பி எழுதவேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கறுப்பு மை கொண்ட பேனாவால் விடைகளை தெளிவாக எழுதவேண்டும்.
* விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இடவேண்டியது அவசியம்.
மாணவர்கள் செய்யக்கூடாதவை வருமாறு:–
* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக்கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயர் ஆகியவற்றை எழுதக்கூடாது
* விடைத்தாள்கோட்டின் இடது பக்கத்தில் எழுதக்கூடாது.
* வண்ணக்கலர் கொண்ட பேனா, வண்ணக்கலர் கொண்ட பென்சில் எதையும் பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாளின் எந்த பக்கத்தையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது. இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive