Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லோக்சபா தேர்தல்: ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை.

 
          லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர்.
 
              மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

                 இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.இதற்காக, சங்க நிர்வாகிகள் மீது, பாசமழை பொழிந்து வருகின்றனர். பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று, அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு விடுத்து, அவர்களிடம் நலம் விசாரித்து, பின், அவர்கள் கோரிக்கை குறித்து, பிற்பகல், 2:30 மணி வரை, பேச்சு நடத்தினார்.

               பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர் சங்கம் என, பல சங்கங்களின் நிர்வாகிகள், தனித்தனியே, இயக்குனரை சந்தித்தனர். அப்போது, "உங்க கோரிக்கை எதுவா இருந்தாலும் சொல்லுங்க; அரசின் கவனத்துக்கு கொண்டு போய், உடனே, தீர்த்து வைச்சுடலாம்' என, ஆரம்பித்து, கோரிக்கை தொடர்பாக, துறை பணியாளர்களை உடனுகுடன் அழைத்து, சங்க நிர்வாகிகள் முன், சீரியசாக விவாதித்தார். இதனால், கோரிக்கைகள் ஏற்கப்பட்டது போன்ற திருப்தியுடன், அலுவலகத்தில் இருந்து, நிர்வாகிகள், நடையை கட்டினர். சில மூத்த நிர்வாகிகளோ, "தேர்தல் நெருங்குவதால், முதல்வரை திருப்திபடுத்த, அதிகாரிகள் நடத்தும், அரசியல் ஸ்டண்ட்' எனக்கூறி, நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.




3 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Very very urgent for take immediate action
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோ RELAXATION And ் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன
    ்இப்படிக்கு
    சேலம் பிரபாகரன் 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    ஆத்தூர் சுசீலா 8883316447
    பெரம்பூர் மாதவி 9840612094
    கரூர் காளியப்பன் 9843140600
    எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்துஇந்த தகவலை சமுக வலை face book , twitter.,,, போன்றவை முலம் பரப்பவும

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive