Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாக்., ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் அட்டாக்

 
           பெஷாவர்: ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை வைத்துள்ள சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டனர். 

            இதில் 120 மாணவர்கள் உட்பட 132 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இன்னும் பலர் காயமுற்று இருப்பதாகவும், பலர் உயிருக்கு போராரடிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெஷாவர் முழுவதும் அபயக்குரல் கேட்ட வாறு உள்ளது. பள்ளிக்குள் 2 முறை பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. பலர் கை, கால்கள் இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது.பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் ஆறு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் பாக்., ராணுவ படையினர் இறங்கியுள்ளனர்.பிரதமர் ஷெரீப் கண்டனம்: பயங்கரவாத செயலுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.தலிபான் பயங்கரவாதிகள் : இந்த சம்பவத்திற்குதெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 6பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் அனைவரும் ராணுவ உடையில் பள்ளிக்குள் நுழைந்தனராம். இன்னும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive