அங்கன்வாடிகளுக்கான உணவு பொருட்கள் சரியான முறையில் வாங்கவில்லை என, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கோலார் மாவட்டம், ஜில்லா பஞ்சாயத்து அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சுகாதாரத் துறை அமைச்சர் காதரிடம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் மனு வழங்கினர். மனுவில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவி இயக்குனர் சகுந்தலாவுக்கு எதிராக புகார் கூறப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளுக்கு உணவு பொருட்கள் சரியாக வாங்குவதில்லை. உதவி இயக்குனரின் உறவினருக்கு சொந்தமான கடையிலே வாங்க வலியுறுத்துவதாக, குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்று கொண்ட அமைச்சர், "ஜில்லா பஞ்சாயத்து, மாவட்ட கலெக்டர் அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பர். அறிக்கை வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.TET Study Materials
Home »
» அங்கன்வாடிக்கு உணவு பொருள் வாங்காததை கண்டித்து போராட்டம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...