Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

          பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ல் துவங்கி, மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. வரும், 7ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியலை தாமதமாக வழங்கும் பிரச்னையை தவிர்க்க, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது.இதுதொடர்பாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு:

* தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொண்டு, உயர்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்.
* சான்றிதழை, பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
* இதற்காக பள்ளிகளில், கணினி, பிரின்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
* பள்ளி அலுவலக ஊழியர்கள் மற்றும் விடுமுறையில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, மதிப்பெண் சான்றிதழை நகல் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பமுடன், மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்.
* தேர்வு முடிவு வெளியானதும், இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.
* இந்த சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive