Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி

         பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் scan.tndge.in  என்ற இணையதள முகவரியில், ஜூன் 4-ஆம் தேதி வரை தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation  என்ற இணைப்பைத் தேர்வு செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
 இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive