Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரேஷன் கார்டு கள ஆய்வு : வி.ஏ.ஓ.,க்கள் மறுப்பு

      ரேஷன் கார்டு குறித்து வீடுதோறும் நடத்தப்பட உள்ள கள ஆய்வில், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 
 
       தமிழகம் முழுவதும், 2.38 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைத்து, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்காக, வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் வீடு வீடாக நேரில் சென்று, ஒவ்வொரு ரேஷன் கார்டையும் தனித்தனியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது, வீடு, கார், நிலம், வீட்டில் உள்ள பொருட்கள், எத்தனை உறுப்பினர்கள், தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா உள்ளிட்ட, 27 விபரங்கள் சேகரித்து, அதை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிப் பளுவாலும், ஆன்லைன் சான்று வழங்குவதில் உள்ள சிரமங்களாலும், இப்பணியில் ஈடுபட இயலாத நிலைமை உள்ளதாக, கிராம நிர்வாக அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:இது நாள் வரை, குடும்ப அட்டை பணிக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல், கூட்டுறவு பணியாளர்கள், சிவில் சப்ளை தாசில்தார், ஆர்.ஐ., கிளார்க் போன்ற பணியாளர்கள் மட்டுமே பார்த்து வந்தனர். ஏற்கனவே, பல்வேறு பணிகளுக்கு இடையில் சிரமப்பட்டு வரும் நிலையில், எங்களிடம் இப்பணியை வழங்குவது நியாயமற்றது. எனவே, குடும்ப ரேஷன் சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive