Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 தேர்வு: செல்போன், கால்குலேட்டருக்கு தடை

    துணைக் கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது.தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர்-29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிவரித்துறை உதவி ஆணையர்- 8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, மாவட்ட தீயணைப்பு அலுவலர்- 8 ஆகிய குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 85 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும். தேர்வுக்கூடத்துக்கு செல்வோர் கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார். அதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கட் ஆப் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்படும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive