Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் !!

         அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விவரம்: அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவர்களை நியமிக்க அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், காப்பீடு முகவர்களாக பணிபுரிய விரும்புவோர், 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்போர் எனில் 10-ஆம்
வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலையில்லாதவர்கள், சுய தொழில் புரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் ஏதேனும் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு ஆலோசகராக பணிபுரிந்தவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
அதுபோல், அங்கன்வாடி, மஹிளா மண்டல பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு வயது வரம்பு 18 வயதிலிருந்து 60 வயது வரையாகும்.
அதோடு, காப்பீடு விற்பனையில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், வசிக்கும் பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நேர்காணலுக்கு, எண்.2, சிவஞானம் சாலை, தியாகராய நகர் (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு வரவேண்டும்.
இதில், கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சுய விவரம், வயது, கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என அஞ்சல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive