NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

02.01.2022 ஆயக்குடி மையத்தின் குறிப்புகள் மற்றும்டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள் !

 

7 ஆம் வகுப்பு தமிழ்

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்

முக்கிய வினா விடைகள்

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்கதை, சங்கொலி ஆகிய நூல்களை எழுதியவர் – நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்


நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் – உடுமலை நாராயணகவி


அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் ஆகிய நூல்களை எழுதியவர் – சுரதா


சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளவர் – ராஜமார்த்தாண்டம்


சங்கக்கால மக்களின் வீரத்தை கருப்பொருளாக கொண்டு புலி தங்கிய குகை என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் – காவற்பெண்டு


காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் உள்ளது – புறநானூறு


வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலை எழுதியவர் – நா. வானமாமலை


ஆங்கில மொழியில் ஆலன் எழுதிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் – வ.உ.சி


மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களை எழுதியவர் – வ.உ.சி


இரா.பி.சேது இயற்றிய நூல்கள் – தமிழின்பம், ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் – ஊரும் பேரும், மேடைப்பேச்சு


பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களையும் எழுதியவர் – கடியலூர் உரத்திரங்கண்ணனார்


பத்துப்பாட்டு நூல்கள்:


திருமுருகாற்றுப்படை – நக்கீரர்


பொருநராற்றுப்படை    – முடத்தாம கண்ணியார்


பெரும்பாணாற்றுப்படை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்


சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்


முல்லைப்பாட்டு – நப்பூதனார்


மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்


நெடுநல்வாடை    – நக்கீரர்


குறிஞ்சிப்பாட்டு – கபிலர்


பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்


மலைபடுகடாம்   – பெருங்கௌசிகனார்


கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் – மருதன் இளநாகனார்


மருதத்தினை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார்


ஜீல்ஸ் வெர்ன் எழுதிய புதினங்கள் – எண்பது நாளில் உலகத்தை சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம், ஆழ்கடலின் அடியில்


இன்பத்தமிழ் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் – பாரதிதாசன்


பாரதிதாசன் எழுதிய நூல்கள் – பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்


நாலடியார் நூலின் ஆசிரியர் – சமண முனிவர்


வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனை களஞ்சியம் ஆகிய நூல்களை எழுதியவர் – திருக்குறளார் வீ. முனிசாமி


பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்


சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல்கள் – பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை, பள்ளி மறுதிறப்பு


நன்னூலை எழுதியவர் – பவணந்தி முனிவர்


தேனரசன் எழுதிய நூல்கள் – மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம்


காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் – திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல், தனிப்பாடல்கள்


பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் – முன்றுறை அரையனார்


மலை அருவி – கி.வா. ஜகந்நாதன்


திருப்புகழ் பாடியவர் – அருணகிரிநாதர்


காவடிச்சிந்தைப் பாடியவர் – அண்ணாமலையார்


குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்.


இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் – டி.கே. சிதம்பரநாதர்


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் – பொய்கையாழ்வார்


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் – பூதத்தாழ்வார்


நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை பாடியவர்கள் – பன்னிரு ஆழ்வார்கள்


நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் – நாதமுனி


அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர் – முனைப்பாடியார்


குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள் – நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்


இயேசுகாவியத்தை எழுதியவர் – கண்ணதாசன்


மலைப்பொழிவு என்னும் தலைப்பில் நமக்கு வந்துள்ள பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது – இயேசுகாவியம்


சே. பிருந்தா எழுதிய நூல்கள் – மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை


தன்னை அறிதல் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது – மகளுக்குச் சொன்ன கதை


பாவண்ணன் எழுதிய நூல்கள் – வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive