NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.01.22

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைமாட்சி

குறள் எண் : 766
குறள்:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

பொருள்:
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.

பழமொழி :

Idleness is the root of all evils


தீங்குகளின் உறைவிடம் சோம்பல்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை. 

2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை

பொன்மொழி :

எல்லாம் போய்விட்டாலும், வெல்ல முடியாத உள்ளம் இருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்--------- காமராசர்

பொது அறிவு :

1. எந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது? 

ஐஎன்எஸ் விக்ராந்த். 

2. சமீபத்தில் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 73 வது கிராண்ட் மாஸ்டர் ஆக அங்கீகரிக்கப்பட்டவர் யார்? 

பரத் சுப்பிரமணியம்.

English words & meanings :

Hang in - don't give up, முயற்சியை விடாதே, 

on cloud nine - very happy, மிக்க மகிழ்ச்சியாக

ஆரோக்ய வாழ்வு :

கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்

கணினி யுகம் :

Alt + Right - Leverage Next Tu. 

Alt + Left - Leverage previous Tu.

நீதிக்கதை


குரு சொன்ன அறிவுரை

ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 

மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.

இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.

நீதி :
நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.12.21

✅ தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் திரு நரேந்திர மோடி  காணொலி மூலம் திறந்து வைத்தார்.

✅ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம். இவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு.




✅ அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு..!!

✅ கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காகவே மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

✅ இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்காவை 210 ரன்களில் சுருட்டியது இந்தியா. 

✅ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து - 
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

Today's Headlines

*  In Tamil Nadu PM Thiru. Narendra Modi inaugurated 11 medical colleges virtually

* S Somanath was  appointed as the tenth chairman of the Indian Space Research Organisation (ISRO). He will hold his office for 3 years says central government. 

* The online registration for Jallikattu which is going to take place in Avaniyaapuram, Balamedu and Alanganallur is over.

* To give vaccination only the students are being called explains Tamil Nadu government in the court. 

* The 3rd Cricket test match is taking place in Cap Town ground between India and South Africa. Yesterday that is the day two the Indian team just folded the South African team by 210 runs.

*  In Asian Women's football for Indian team players from Tamil Nadu got selected. They are Indhumathy,Santhiya, Karthicka, Soumya and Mariyammal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive