NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒமைக்ரான்... தப்புவது எப்படி?


உருமாறும் கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் இப்போது ஒமைக்ரான் என மிரட்டுகிறது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகம் எடுத்துள்ளதால் ஒமைக்ரான் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

* தென் ஆப்ரிக்காவில் கிளம்பிய ஒமைக்ரான் பல நாடுகளில் பரவி வருகிறது.டெல்டாவை விட நான்கு மடங்கு வேகமாக பரவும். இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.

* நோய் பாதிக்கப்பட்ட முதியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஒரு லட்சம் நோயாளிகளில் 1500 பேர் கடுமையாக பாதிக்கப்படலாம்.

* காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு, உடல் வலி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுகவும். தவறினால் ஆபத்து ஏற்படும்.

* முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டால்,நோயாளிகளை காப்பது சவாலாகும்.

பாதிப்பு குறைவு

* ஒமைக்ரான் வீரியம் குறைந்தது. ஆக்சிஜன் வென்டிலேட்டர் தேவை இருக்காது. இறப்பு குறைவு. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு பாதிப்பு குறைவு.
* ஒமைக்ரான் நுரையீரலை அதிகம் தாக்காது. இதனை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவை.

தடுப்பூசி ஆயுதம்

* மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், முழு ஊரடங்கு அவசியமில்லை. சுயகட்டுப்பாடு போதும்.

* காற்றின் மூலம் வைரஸ் பரவுவதால், கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

* அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

* சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம்.

* முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ளவேண்டும்.

* இரண்டு ஆண்டுகளாக கொரோனா அனுபவம் நமக்கு உண்டு. விஞ்ஞான பூர்வமான முறையில் பொறுப்பாக நடந்து கொண்டால், ஒமைக்ரானை வெல்வது எளிது




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive