Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

 


 

அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


அசாம் மாநிலத்தில் ஆசிரியர்கள் சிலர் சில நேரங்களில் பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும் ஆடைகளை அணிவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநில கல்வித்துறை, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதன்படி ஆசிரியர்கள் சாதாரண வண்ணங்களில் ஆளான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், பளபளப்பான மற்றும் பார்ட்டி ஆடைகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்கள் முறையான உடையை மட்டுமே அணிய வேண்டும், சட்டை-பேன்ட் அங்கீகரிக்கப்பட்ட ஆடையாக இருக்கும். 


பெண் ஆசிரியர்கள் முறையான சல்வார் சூட், சேலை, உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும், அதேசமயம் டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. மேலும் அரசின் இந்த ஆடை கட்டுப்பாடை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





1 Comments:

  1. ஜீன்ஸ் போடுவது தப்பா? மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வருவதை விட்டு விட்டு, ஆசிரியர்களுக்கு ஐட்டுப்பாட்டை கொண்டு வரும். இந்த தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றும், மற்றும் வெளிநாட்டு கல்விக்கொள்கையை பின்பற்ற நினைக்கும் அரசு இருக்கும் வரை நமக்கு முன்னேற்றமில்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive