Text Books / Guides / Study Materials Download
அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக
பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை
கல்வியில்
பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் -தினமலர் செய்தி
எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர்
செயல்முறை
விடைத்தாள் திருத்துவதில் தவறு ஆசிரியர்களுக்கு அபராதம்
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை,
அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12 வயதில் குழந்தைப் பருவம் முடிந்துவிடுகிறது: ஆய்வுகள்
வளர் இளம் பருவத்தை எட்டுவதற்குள் தங்கள்
குழந்தைகளின் குழந்தைப் பருவம் முடிந்துவிடுவதாக மூன்றில் இரண்டு பங்கு
பெற்றோர்கள் ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு
இந்தி, உருது மொழிக்கல்வியின் நன்மைகள்
இந்தியாவில் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. வடமொழிக் குடும்பம்
மற்றும் திராவிட மொழிக் குடும்பம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக
பிரிந்துள்ள அம்மொழிகளில், பல்வேறான வேலைவாய்ப்புகள் உள்ளன.
பிளாஸ்டிக் அழிக்க ஆராய்ச்சி: பேராசிரியருக்கு விருது
மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை,
நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை
போராசிரியர் வி.பிரபாகரனுக்கு, டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில்
அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நேரில் கற்றுத் தருவதை விட, கம்ப்யூட்டர் மூலம் கற்பித்தல் எளிமையாக புரியும்படி உள்ளது
பள்ளிப் பாடத்தை, கம்ப்யூட்டர் வழியில் கற்றுத்
தருவதற்கான செயல் திட்டங்களுக்கு, தேசிய கற்பித்தல் விருது
வழங்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, செயல் திட்டங்கள்
வரவேற்கப்பட்டன.
பொதுவான பாடத்திட்டங்கள், முன்னேற்றத்திற்கு உதவாது: யு.ஜி.சி
"நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் என்பது,
முன்னேற்றத்திற்கு உதவாது. ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள தேவையை அறிந்து,
அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வியை வழங்கினால் தான், நாடு
முன்னேறும்" என, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் (யு.ஜி.சி) வேத் பிரகாஷ்
பேசினார்.
பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சிகள்
முதுமலை கார்குடியில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம் கார்குடியில் அரசு பழங்குடியினர் உண்டு
உறைவிடப் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் அனைத்து
மாணவர்களும், பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.
01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.
01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான
பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.
சான்றிதழ்கள், ஓய்வூதியம் வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்
பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச்
சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில்
வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது.
சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை,
அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை,
நேற்று ஒப்புதல் அளித்தது.
ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு: 12 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த ஆங்கில இரண்டாம் தாள் தேர்வில், 12
மாணவர்கள், பிட் அடித்து, பிடிபட்டனர். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக,
இதுவரை, 66 மாணவர்கள் பிடிபட்டு, தேர்வுத்துறையின் தண்டனை வளையத்தில்
சிக்கியுள்ளனர்.
செய்முறை வகுப்பு: 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்
செய்முறை வகுப்புக்கு விண்ணப்பிக்க தவறிய, பத்தாம் வகுப்பு தனித் தேர்வு
மாணவர்கள், உடனடி தேர்வு எழுத, ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
36 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 36 மையங்களை தயார் நிலையில்
வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பள்ளிப் பேருந்துகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா
மும்பையில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும், ரகசிய கண்காணிப்பு
கேமராக்களை பொருத்த, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களால்,
மாணவிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்து,
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
GPF Forms ( Full Set for Bill Preparation ) now available our site
Thanks to Mr. Sugumar,
Headmaster,
GHS,
Vilai,
Thiruvannamalai District.
+2 Study Material
- Analysis of 5 mark PROBLEMS in PHYSICS asked in the Board examination (March 2006 to October 2012)-Prepared By Mr.Natrajan,PGAsst,GHRSS,Alakkudi,Thanjavur Dt.
ஆட்டிசம் குழந்தை பயிற்சி முகாம்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
சிறப்பாசிரியர்களுக்கு, ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பயிற்சி முகாமில்,
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய நிறுவனம் மற்றும் சித்தர் நிறுவனமும்
இணைந்து நடத்திய ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய பயிற்சி முகாமில், சான்றிதழ்
வழங்கும் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலையில் நடந்தது. இதில் நகராட்சி தலைவர்
செல்வராஜ் தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட
ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நீரதா, ஆட்டிசம்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகவல் தொடர்பு திறன் மேம்பாடு குறித்து
பயிற்சிகளை அளித்தார்.
அண்ணா பல்கலை: இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்போர் திறனை கண்டறிய புது மாற்றம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது
பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டது.
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் யார்... ஓரிரு நாளில் அறிவிப்பு?
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன்
முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில்
வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை
சென்னை பல்கலை மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம்
ஆங்கிலத் தேர்வில் முறைகேடு: 37 மாணவர் சிக்கினர்
தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், 37
மாணவர்கள், பிட் அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். ஏற்கனவே
நடந்த தமிழ் முதற்தாள் தேர்வில், ஆறு பேரும்; இரண்டாம் தாள் தேர்வில், 11
பேரும்; பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, அன்றைய தேர்வில் இருந்து
நீக்கப்பட்டனர்.
IGNOU- B.Ed
IGNOU - B.ED ASSIGNMENTS 2013 - DOWNLOAD
IGNOU I YEAR SOLVED ASSIGNMENTS JAN-2013
ES - 33 1
|
|
ES-332
|
|
ES -333
|
|
ES-341
|
|
5-ம் வகுப்பு மாணவர்களிடம் தமிழ் வாசிப்புத் திறன் இல்லை
ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 20
சதவிகிதம் பேரிடம் தமிழ் வாசிப்பு திறன் இல்லை என செஞ்சியில் நடைபெற்ற
வாசிப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டத்தில் மாநில
தொடக்கக்கல்வி இணை இயக்குநர்
லதா வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலைக்கு
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பாவர். வாசிப்புத்திறனை
மேம்படுத்தாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.
கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்
வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை,
கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என,
பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள்
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது
கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப்
பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும்
துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும்
என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மூன்று கட்டமாக நடந்தது.
இதில் 2,941 பேருக்கு பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன . மேலும் 230 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டலிஜென்ஸ் டெஸ்டில் ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுமி
இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன்
மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை
படைத்துள்ளார்.
9 பல்கலைகளுக்கு நவரத்தினா அந்தஸ்து: ரூ.300 கோடி கூடுதல் மானியம்
பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பில் அளிக்கப்படும், நவரத்தினா
பல்கலை அந்தஸ்து பெற, தமிழகத்தில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்வு
செய்யப்படும் ஒன்பது பல்கலைகளுக்கு, தலா, 300 கோடி ரூபாய், கூடுதல் மானியம்
கிடைக்கும்.
தேர்ச்சி பெற்றும் பணியில்லை: தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி
தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல்,
தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
விழுப்புரம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெரு பகுதியில் உள்ள செயின்ட்
ஜான் மாற்றுதிறனாளிகள் மேல்நிலை பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை
மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு
செஸ் போட்டியில் மாணவர் சாதனை
செஸ் போட்டியில், அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்.,
மேல்நிலைப்பள்ளி சார்பில் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடியில் கடந்த, 2ம் தேதி, மாநில அளவிலான செஸ் போட்டிகள்
நடைபெற்றது. இதில் 7, 9, 11, 13, மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான
சதுரங்க போட்டிகள், ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதுநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
2011 - 12 ஆண்டிலும் அதற்கு முந்தைய
ஆண்டுகளிலும் உருவான 700 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முதலில் உள் மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும், பிறகு பிற
மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வுக்கு அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களை சிறப்பு பார்வையாளராக மாவட்ட வாரியாக நியமித்து தேர்வுத்துறை உத்தரவு.
மேல்நிலைத் தேர்வில் அதிக முக்கியத்துவம்
வாய்ந்த கணிதம், இயற்பியல், வேதியியல், உயரியியல், தாவரவியல் மற்றும்
விலங்கியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும் நாட்களில் தேர்வு
மையங்களை கண்காணித்திட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டைகளைப் போலவே
இவ்வாண்டும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி
அலுவலர்களும் வருகின்ற பேராசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?
7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில்
இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை
இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த
பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன்
அமைக்கப்படுகிறது என கூறினார்.
10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு
தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில்
"நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க
தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு
பிளஸ் 2 பிரெஞ்ச் தேர்வு: புரியாத கேள்விகளால் திணறிய மாணவர்கள்
தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பிரெஞ்ச் இரண்டாம் தாள் தேர்வில்,
மாணவர்களை குழப்பும் வகையில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக
தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இந்திய டாக்டர்கள் மீது தகுதி தேர்வில் பிரிட்டன் பாரபட்சம்
பிரிட்டனில், டாக்டர்களுக்கான தகுதி தேர்வில், இந்தியர்கள் வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்யப்படுவதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் 2ம் தாள் தேர்வில் 11 பேர் சிக்கினர்
தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் இரண்டாள் தாள் தேர்வில், பிட்
அடித்த, 11 மாணவர்கள் பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர். இதன் காரணமாக
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை,
17 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில், தலா ஒரு மாணவர், கடலூர்,
காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில், தலா இரு மாணவர் மற்றும் திருவள்ளூர்
மாவட்டத்தில், மூன்று மாணவர் என, 11 பேர், பறக்கும்படை குழுவினரிடம்
சிக்கினர். கடந்த, 1ம் தேதி நடந்த தேர்வில், ஆறு மாணவர்கள் சிக்கினர்.
தமிழ் 2ம் தாள் தேர்வு: மாணவ, மாணவியர் ஏமாற்றம்
பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாள், ரிப்பீட் ஆனது போல், இரண்டாம்
தாள் கேள்வித்தாளும் இருக்கும் என, எதிர்பார்த்து, மாணவ, மாணவியர் ஏமாற்றம்
அடைந்தனர்.
ஆசிரியர் பட்டய தேர்வு: 36.57% பேர் தேர்ச்சி
தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத்
தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில்,
35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது.
இதில், 13,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம்
36.57. தோல்வியுற்ற மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆங்கிலப் பாடத்தில்
தோல்வி அடைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனிமேஷன் துறை - அம்சங்கள், பணிவாய்ப்புகள்!
திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக, உருவங்களை படைக்கும் கலைக்கு
அனிமேஷன் என்று பெயர். இக்கலையானது, கலையம்சமான படங்கள், வணிகப் படங்கள்,
பாப் வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் வலைத்தளங்கள் என்ற வகையில்
அனைத்து வகை மீடியாக்களிலும், இந்த அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம்
புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்து விடும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு நேரம் குறைப்பு
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு,
புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து
அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.









