Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 பிரெஞ்ச் தேர்வு: புரியாத கேள்விகளால் திணறிய மாணவர்கள்


      தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பிரெஞ்ச் இரண்டாம் தாள் தேர்வில், மாணவர்களை குழப்பும் வகையில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன. இதன் காரணமாக தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

          தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. பிரெஞ்ச் முதள் தாள் கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது. நேற்று பிரெஞ்ச் இரண்டாம் தாள் நடந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் மாணவ, மாணவியர் பிரெஞ்ச் தேர்வு எழுதினர்.

         சென்னையில் சுமார் 6,000 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் சுமார் 2,000 மாணவ, மாணவியரும் பிரெஞ்சு தேர்வு எழுதியுள்ளனர். நேற்று நடந்த பிரெஞ்சு இரண்டாம் தாள் தேர்வில் 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எழுத்து மற்றும் இலக்கண பிழையுடன் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

         இதனால், பிரெஞ்ச் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், "பிரெஞ்ச் முதல் தாள் ஈஸியாகவும், வினாக்கள் தெளிவாகவும் இருந்தது.

          அதற்கு எதிராக இரண்டாம் தாளில் வினாக்கள் இடம்பெற்றுள்ளது வேதனையளிக்கிறது. வினாக்களில் எழுத்துப்பிழையும், கடினமான இலக்கணங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறும் நம்பிக்கை இல்லை. பிழையான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்றனர்.

           இந்திய பிரெஞ்ச் ஆசிரியர்கள் சங்க(தெற்கு மண்டலம்) துணை தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: பிரெஞ்ச் இரண்டாம் தாளில் இடம்பெற்ற வினாக்கள், மாணவர்களை குழப்பும் வகையிலும், 100 சதவீத மதிப்பெண் கனவை தகர்க்கும் வகையிலும் உள்ளன.

           இத்தேர்வில், 11 ஒரு மதிப்பெண் வினாக்கள் எழுத்துப் பிழையுடன் புரியாத வகையில் இடம்பெற்றுள்ளன. ஐந்து மதிப்பெண் வினா ஒன்றில், வினைச்சொல்(வெர்ப்) புரியாத வகையில் "டைப்பிங்&' பிழையுடன் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பல வினாக்கள் பிழையுடன் உள்ளன.

           10க்கு ஏழு வினாக்கள் இலக்கண பிழையுடன் கேட்கப்பட்டுள்ளதால், 100 சதவீத மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறையும். வினாத்தாளில் எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழையுடன் உள்ள 20 மதிப்பெண் வினாக்களுக்கு, முழுமையான மதிப்பெண்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive