NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்


           "டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


              டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், குரூப்-2, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பாடப் பகுதிகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தன.

               குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதிக்கான கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

              வி.ஏ.ஓ., தேர்வில், மொழித்தாள் கேள்விகளின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், தமிழ் மொழித்திறனுக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

             இந்நிலையில், இந்த பிரச்சனை, சட்டசபையில், நேற்று எதிரொலித்தது. மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் ஆகியோர், தமிழ் மொழித்திறன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து, கேள்வி எழுப்பினர்.

               இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், "தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்" என, தெரிவித்தார்.

             இதற்கு, "ஏற்கனவே இருந்த நிலையை, உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்தால் போதும்" என, சவுந்திரராஜன் தெரிவித்தார்.

                  இதுகுறித்து, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்ட போது, "எந்தெந்த தேர்வுகளில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில், எதுவும் கூற முடியாது" என, தெரிவித்தார்.

               இந்த விவகாரத்தில், முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, தேர்வாணையத்திற்கு, அமைச்சர் கடிதம் எழுதியிருப்பார் என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழி பகுதிக்கான கேள்விகள், பழையபடி மீண்டும், பாடத்திட்டத்தில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                  பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான முடிவுக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இந்த ஒப்புதலை பெற்றபின், உரிய தகவல், தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.

               அதன்பின், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பை வெளியிடுவார் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive