Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

9th Standard 3rd Term Questions


3rd Term Question
  1. Tamil - 3rd Term Question - Mr. Damodiran, GHS, Melatur - Click Here

விடுமுறை என்றும் பாராமல் மாணவர் நலனுக்காக உழைத்த ஆசிரியை மீது அடித்ததாக புகார். - இன்றைய கல்வியின் நிலை?

       சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.

தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.


           தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
 

தமிழ் வழிக்கல்வி பரப்புரை இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம்.


            கிராம நிர்வாக அலுவலர் பணியை (வி.ஏ.ஓ.,) தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தழிழ்வழிக்கல்வி பரப்புரை இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"

 
           ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன்அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது.
 

12th Latest Study Material


12th Physics Study Material

  1. Physics - Compulsary Problems-English Medium

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


           மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது, அதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.


வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம்.

 
              வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள் கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து, விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை நடத்தி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 16ம் தேதி பிளஸ்1 வகுப் புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 10ம் வகுப்புதேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிடப்படும். அதாவது நாடாளுமன்றதேர்தல் முடிந்த பின்னர் 10ம் வகுப்பு ரிசலட் வர வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ல் பிளஸ்1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு 1 வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும்.

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் மாணவர்கள் அவதி..

            தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும்.
 

கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

           பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை

தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தேர்தல் ஆணையம்

 
       தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும்.
 

தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஆணை மாதிரி வாக்குசாவடியில் சிறப்பு பயிற்சி

 
         தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஆணையில் ஒரு ‘யூனிக்’ எண் வழங்கப்பட்டுள்ளது.
 

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

 
          மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
 

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

 
     இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி

05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம்
12.04.2014~பள்ளி வேலை நாள்
14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை
17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன்
18.04.2014~புனித வெள்ளி விடுமுறை
19.04.2014~சனி விடுமுறை

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி ???



         தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.

Batch 2 Starts Today (30.03.2014) | TNPSC Online Coaching Via Model Tests.


TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.
Batch 2 Time Table - (Starts from 30.03.2014)
TET Unit Test Time Table

Unit Test 1        5.04.2014
Unit Test 2        12.04.2014

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் பணி
           தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

தொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

      "தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது.

10th Study Material


10th English Study Material Short Hints - Click Here


இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே (TET) புதிய நியமனம் ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தல்

         இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.

ஆட்சியராக இருந்தபோது அடிக்கடி அரசு பள்ளிகளை ஆய்வு செய்வேன்: உ.சகாயம் ஐ.ஏ.எஸ்

       படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக் கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார்.
 

TNPSC: REVISED & UPDATED Syllabus


S.No
NAME OF THE SERVICES (CLICK ON THE POSTS)

TET / TRB Court Case Detail

          01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு

 
           5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி, முக்கியத்துவம் தர உத்தரவு

 
           தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

 
                தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!



           பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருவதாக குறிபிடுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எளிதாகவும், சுருக்கமாகவும் கூறியவை தான் பழமொழிகள். அவ்வாறு புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும் .. 


தனியார் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்த்த பரிந்துரை; அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்

 
           தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்"

 
           எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.
 

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை

 
      மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

DEPARTMENTAL EXAM - ONLINE APPLY DATE EXTENDED - TO 15.04.2014


Departmental Examinations May 2014 - Instructions
  1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations May 2014 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post. However,those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 MUST send the Online Application Form and the Identification Slip to TNPSC Office by post with relevant details of previous examinations, Work etc.

பெண் தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப போக்குவரத்து வசதி வேண்டும்

           பெண் தேர்தல் அலுவலர்கள் தக்க பாதுகாப்புடன் வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜேஷிடம் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிறப்பு ஊதியத்துடன் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்

              ஓட்டுப்பதிவு அன்று வாக்குசாவடிகளை வெப் காமிரா மூலம் பதிவு செய்யும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர். இந்த வெப் காமிரா இயக்குதல், கண்காணிப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

         75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive