Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்களோடு போராடும் ஆசிரியர்கள்!!


           மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. 
 

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

         தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

‘சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட கல்வி அதிகாரி கைது

          கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

               பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் சிலர், பல்வேறு காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் போயிருக்கலாம். அவர்களின் நலன் கருதி, 'தக்கல்' முறை எனப்படும் சிறப்பு அனுமதி முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தேர்வு வாரிய ஊழல் வழக்கு: மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா

            மத்திய பிரதேசத்தில் வனக்காவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவும் (வயது 86) நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் (எப்ஐஆர்) பதிவு செய்தனர். 


பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்

              உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு

தற்காலிக மதிப்பெண் சான்று 

           பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

              இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன்  படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக

வருமா... வராதா...? : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்

           கடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை கிடைக்கவில்லை. உதவித்தொகை எப்போது கிடைக்கும் என, தெரியாமல், வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

           பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

பாடசாலை பெருமிதம்கொள்கிறது! நமது ஆசிரிய தன்னார்வலர்களுக்கு நன்றிகள் பல...

Image result for Free service


           கல்வித்துறை சார்ந்த செய்திகளை வழங்கும் ஒரு வலைதளத்தால் வேறு என்ன செய்துவிட முடியும்?

முடியும். முடியும். முடியும்.

PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

        தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை

       அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

          தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 
 

மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

Image result for எவ்வளவு அடிச்சாலும்
(அடிச்சா திருப்பி அடிக்காதவங்க உலகத்துலேயே இரண்டு பேர் தான் -
1) கோயில் பூசாரி, 2) பள்ளிக்கூட வாத்தியார் - சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்பட வசனம் இது.
ஏன்னா? வாத்தியார்கள் ”ரொம்ப..... நல்லவன்”)

செய்தி-
         பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

         பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்என பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

         ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?
 

மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை

          வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

      முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

         கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர்.

எஸ்.எஸ்.சி. தேர்வின்போது தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

                மும்பை ஐகோர்ட்டில் விஷ்ணு காவ்லி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மராட்டியத்தில் மார்ச் 3–ந் தேதி எஸ்.எஸ்.சி. மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்குகிறது. மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கூடங்களில் சீரான முறையில் மின்விநியோகம் செய்வதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். 
 

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு

                மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். 
 

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை

          என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

     காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 

குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு

            மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

            தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி

           தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு. இரண்டு மற்றும் நான் காம் சனிக்கிழமை விடுமுறை


           ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive