Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்த நாட்களை பணிக்காலன்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 2016 , 2017, 2019-ம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக அறிவிக்கப்பட்டது.
GO NO :113 ,DATE : 13.10.2021

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு!

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிப்பு

2020-21-ம் கல்வியாண்டில் RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிக்கப்பட்டுள்ளது.


கல்விக் கட்டணம் செலுத்த ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



RTE சட்டத்தில் மாணவர்கள் கல்விபயிலும் பள்ளிகளுக்கு 15 நாளில் கல்விக்கட்டணம் வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

l


Flash News : TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

.




 ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்

ஆணை :

1. மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



 2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கையில் , ஆசிரிய வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது . 



4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் 61 GOT தெரிவித்துள்ளார் . எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.



5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது : 



( i ) தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 ( a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

( ii ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

 ( iii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது . 

6. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . /


CBSE - 10, 12-ம் வகுப்பு Term 1 Exam Date Sheet பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.: சிபிஎஸ்இ

 10, 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான தேர்வு தேதி பட்டியலை நம்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை

குறள் : 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

பொருள்:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

பழமொழி :

A willful man will have a way.

                           
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.


2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.

பொன்மொழி :

நன்மைகள் தீமைகள் யாவற்றிற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்வீர்கள் எனில் உங்கள் செயல்களில் விவேகம் உண்டாகும்.

------ விவேகானந்தர்

பொது அறிவு :

1.நீர் அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? 

டால்பின். 

2.மீன்கள் இல்லாத ஆறு எது? 

ஜோர்டான் ஆறு.

English words & meanings :

Hot potatoe(Idioms )- something dangerous or difficult, 

heart in the mouth - nervous

ஆரோக்ய வாழ்வு :

இரத்த பிளேட்லெட் அதிகரிக்கும் உணவுகள் 

✔பப்பாளி மற்றும் பப்பாளி இலை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும். 


✔மாதுளையின் சிவப்பு விதைகளில் ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் கொண்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 


✔ பூசணிக்காய் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பிளேட்லெட்டுகளின் வளர்ச்சியை ஆதரிக்க செய்கிறது. மேலும் உடல் செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களை ஒழுங்குப்படுத்துகிறது. 


✔ கீரைகள், முட்டைக்கோஸ் மற்றும் வெந்தயக்கீரை போன்ற இலைக்கீரைகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. உங்கள் பிளேட்லெட் எண்ணிக்கை கீழே வரும் போது அதிகமாக எடுக்க வேண்டும்.

கணினி யுகம் :

Ctrl + Shift + C - Create a new contact 

Ctrl + Shift + J - Create a new journal entry

அக்டோபர் 18

தாமசு ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்  




தாமசு ஆல்வா எடிசன் (Thomas Alva Edisonபெப்ரவரி 111847 – அக்டோபர் 181931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! 


நீதிக்கதை

மரவெட்டியின் வேண்டுதல்

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான். வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான். மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான். 

உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான். விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான். பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.

இன்றைய செய்திகள்

18.10.21

 * கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதகளில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் இந்திய கப்பல்படை.

*கன்னியாகுமரி மாவட்டம் தொடர் கனமழை - திருவட்டாறில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள பறளியாற்றில் சீறிப் பாயும் வெள்ளம்

* உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல்: கின்னஸ் சாதனைக்கு கோவை உணவுப் பாதுகாப்புத்துறை முயற்சி.

* இ-ஷ்ரம் இணையளத்தில் 4 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு: ரூ.2.0 லட்சம் இழப்பீடு பெறலாம்.

* டி20 உலகக் கோப்பை முதல் சுற்று, முதல் லீக் போட்டியில் ஓமன் மற்றும் பாப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ஓமன் அணி 13.4 ஓவர்களில் 131/0 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

* தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 8-வது முறையாக  கைப்பற்றியது.


Today's Headlines

 🌸 Indian Navy deploys relief supplies by helicopter in areas affected by heavy rains and floods in Kerala.

 🌸 Kanyakumari district heavy rains - half a km from Thiruvattar.  Extreme levels of flood danger were announced in at least two places.

 🌸 Biodiesel in Used Cooking Oil: Guinness World Record for Coimbatore Food Safety Initiative.

 🌸 4 crore unorganized workers registered on the e-Shram website: Rs 2.0 lakh compensation can be obtained.

 🌸 Oman and Papua New Guinea clash in the first round and first league match of the T20 World Cup.  Oman won by 10 wickets at 131/0 in 13.4 overs.

 🌸 India beat Nepal 3-0 to win the Champions Trophy at the South Asian Football Championship.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

BRTE - TEMPORARY PRIORITY LIST

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive