Latest Updates
Public Exam Questions 2024
Home »
» உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் எண்ணிக்கை, அங்கீகாரம் தமிழ் / ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித அடிப்படை திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து சில விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு
அனைத்து அரசு பள்ளிகளிலும் -தொடக்க நடுநிலை உயா்நிலை மேல்நிலை - ஆங்கில வழி வகுப்புகளை துவக்க அரசு அனுமதி அளித்துள்ளது.நன்றி. ஆனால் அரசு பள்ளி இல்லாத அரச நிதி உதவி பெறும் பள்ளி இருக்கும் ஊர்களில் உள்ள மாணவச் செல்வங்கள் என்ன பாவம் செய்தார்கள் ?கல்வித்துறை அவர்களை ஏன் வஞ்சிக்கின்றது.தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கினால் சுயநிதி திட்டத்தின் கீழ்தான் துவங்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்துகின்றது.ஆகமேற்படி ஊரில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வி கட்டணக்கல்வியாக இருக்க அரச முனைவது ஏன் ? அரசு பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்களுக்கு ஒரு நியாயம். அரசு பள்ளி இல்லாத ஊரி்ல் உள்ள மாணவச் செல்வங்களை ஆங்கில வழி கல்வி பெற விடாது தடுப்பது ஏன் ? மாணவச் செல்வங்களை சரிசமமாக பார்க்க வேண்டும். தனியாா் நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சுயநிதி அங்கிகார நிபந்தனைகளை தளா்த்தி உபரி பணியிடங்களை மேற்படி பள்ளிகளுக்கு வழங்கியும் ஆங்கில வழி வகுப்புகளுக்கு நிதி உதவி வழங்கி ஊர் பேதம்யின்றிஅனைத்து தமிழக மாணவச் செல்வங்களும் தாங்கள் விரும்பும் ஆங்கில வழி அல்லது தமிழ் வழியில் இலவச கல்வி பயில அரசு தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ReplyDelete