Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தகவல்கள் சேகரிப்பு

கல்வி மேலாண்மை தகவல் முறையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொது தேர்வுக்கு தனியாக தகவல் சேகரிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

மாணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, பெற்றோர், ரத்த வகை, வகுப்பு, குடும்பத்தினர் எண்ணிக்கை, ஜாதி, பள்ளியில் சேர்ந்த தேதி உட்பட 30க்கும் மேற்பட்ட தகவல்களை கல்வித்துறை அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். இத்தகவல்கள், கல்வி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் போது சான்றிதழ் இல்லாவிட்டாலும், இந்த கார்டை காண்பித்தால், கார்டில் உள்ள எண்ணை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பார்த்து, மாணவனின் தகவல்களை தெரிந்து கொண்டு சேர்த்து கொள்வர்.

மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது, மாணவர்கள் குறித்த தகவல்களை, ஆண்டுதோறும் சேகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஸ்மார்ட் கார்டு தகவலின்படி, சென்னையிலிருந்தே பொது தேர்வுக்கு மாணவர்களின் பயோ டேட்டாவை எடுத்துக் கொண்டு, "ஹால் டிக்கெட்" அனுப்பி விடுவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive