Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு
பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.


இந்த ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பணியிடங்களுக்கு, சில ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால், ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளி களுக்கான காலிப் பணியிடங்களை, இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளுக்கும், இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive