Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை

      வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
        தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்ததால் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த அல்லது மிகபலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். மேலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive