Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிய உணவு கண்காணிப்பு குழுவை மாற்றியது அரசு

       பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தை, கண்காணிக்கும் குழுவில், முதன்முறையாக, சமூக அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 
 
          நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிய உணவானது தரமாகவும், பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும். இதை கண்காணித்து ஆலோசனை வழங்க, 2002ல், சுப்ரீம் கோர்ட் ஆலோசனைப்படி குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில், உணவு பாதுகாப்பு ஆணையர்களாக, என்.சி.சக்சேனா மற்றும் பிரஜ் பட்நாயக் ஆகியோர் இடம் பெற்றனர். இவர்கள் இருவரும், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் இந்த மதிய உணவு கண்காணிப்புக் குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாற்றி அமைத்துள்ளார். 
அதன்படி, கோல்கட்டா அருகே உள்ள, பேலுார் ராமகிருஷ்ணமடம், பவுத்த மடமான தவாங் மோனஸ்ட்ரி, ஆசிம் பிரேம்ஜி பவுண்டேஷன், தொண்டு நிறுவனமான ஆத்மய சேத்தனா, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் பாரதி போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெறுகின்றனர். 
இதில், ஆத்மய சேத்தனா அமைப்பு, பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில், குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறது. மத்திய அமைச்சர் அனந்தகுமார் இதன் நிர்வாகிகளில் ஒருவர். அதேபோல, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் பாரதி அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பழங்குடியின மக்களுக்கான அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive