NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு!!!

          படியில் நின்று பயணம் செய்தபோது நடந்த விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



கால் துண்டானது

சென்னை ஆவடியை சேர்ந்தவர் முகமது தாகீர். இவர், கடந்த 2014–ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்தார். முன்பதிவு செய்யாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருந்ததால், அவர் படியில் நின்றபடி பயணம் செய்தார். மானாமதுரை அருகே வந்தபோது, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது இடது கால் துண்டானது. இதையடுத்து, அவர் இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள ரெயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், முகமது தாகீர் படியில் நின்று பயணம் செய்தது ரெயில்வே சட்டத்தின்படி குற்றமாகும். மேலும், அவர் ரெயிலில் பயணம் செய்ததற்கான டிக்கெட்டை சமர்ப்பிக்கவில்லை. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததும் குற்றமாகும் என்று கூறியது.

ஏற்க முடியாது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வக்கீல் வி.எஸ்.சுரேஷ், ‘விபத்து நடந்தபோது, முகமது தாகீரின் உடைமைகள் எல்லாம் காணாமல் போய் விட்டது. அதனால் டிக்கெட்டை சமர்ப்பிக்க முடியவில்லை. கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் தான் அவர் படியில் நின்று பயணம் செய்தார்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தீர்ப்பாயத்தின் துணை தலைவர் முகேஷ்குமார் குப்தா, உறுப்பினர் எஸ்.மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

ரெயிலில் பயணம் செய்த போது நடந்த விபத்தில் தான் மனுதாரர் முகமது தாகீர் கால்களை இழந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் டிக்கெட்டை அவர் தாக்கல் செய்யவில்லை என்று ரெயில்வே நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது.

ரூ.8 லட்சம் இழப்பீடு

மேலும், படியில் நின்று பயணம் செய்ததால் தான் விபத்து நடந்தது. அதற்கு காரணம் மனுதாரர் தான். அதனால் இந்த விபத்துக்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறுவதையும் ஏற்க முடியாது. ரெயில்வே சட்டப் பிரிவு 124ஏ வின்படி இதுபோன்ற விபத்து நடந்தால், அதற்கு இழப்பீடு வழங்குவது ரெயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு ஆகும்.

எனவே, மனுதாரருக்கு ரூ.8 லட்சத்தை இழப்பீடாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive