NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை NTSE Exam 2019 - தேசிய திறனாய்வு தேர்வு 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக்கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நவம்பர் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (நவ.3) நடைபெறுகிறது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 514 தேர்வு மையங்களில் 1,55,851 மாணவ, மாணவிகள் எழுதஉள்ளனர். காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், அதன்பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடைபெறும். மாணவர்கள் காலை 8 மணிக்குள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive