நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக இடைநிலை ஆசிரியர்களுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட் உத்தரவு



திருவள்ளூர் மாவட் டம் திருத்தணி கல்வி மாவட்டத்தில் திருத் தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்

இவர்களுக்கு, ஒரு ங் கி ணைந்த முன்னுரிமை பட்டியலின்படி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், பள் ளிப்பட்டு ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த முன்னு ரிமை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்க தமிழ்மொழி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரி யர்கள் எதிர்த்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ஆசிரியர்களுக்கு தனித்த னியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர்.

இதனால், 5 ஆண்டுகளாக பள்ளிப்பட்டு ஒன்றியத் தில் தலைமை ஆசிரியர் கள் பதவி உயர்வு வழங் கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது

இதற்கிடையில், சமீ பத்தில் மற்ற பகுதிகளில் நடை பெறும் ஒருங்கி ணைந்த முன்னுரிமை பட்டியலின் படி பதவி உயர்வு வழங்க நீதிமன் றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற தீர்ப்பை மறைத்து புதிதாக வழக்கு தொடரப்பட் டது. ஏற்கனவே, நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு தீர்ப்பு மூடி மறைத்து நீதிமன்றத் தின் நேரத்தை வீணாக் கும் வகையில் செயல் பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு தலா 5 ஆயிரம் அபரா தம் விதித்து உத்தரவிட் டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive