NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம்

 ''கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம் செய்யப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.

மாணவ ருக்கு இடங்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கியபின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

பி.எட்., மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட 5,303 கவுரவ விரிவுரையாளர்களில், யு.ஜி.சி., தெரிவித்துள்ள கல்வி தகுதியின்படி, 3,393 பேர் மட்டுமே உள்ளனர். வரும் காலத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் வழியே, யு.ஜி.சி., விதிப்படி தேர்வு செய்யப்படுவர்.

 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இதுவரை இல்லாத வகையில், 4,000 உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே ஒரே கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான தேர்வில், கவுரவ விரிவுரையாளர்களும் பங்கேற்கலாம். அவர்களுக்கு நேர்காணலில் மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, நவ.,1 முதல் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

தமிழகத்தில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள், 100 ஏக்கர் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன், தங்கள் கல்வி நிறுவன பெயரில், 50 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்தினால், அவற்றுக்கு யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் பல்கலை அந்தஸ்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive