NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023

 


 

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

பொருள்:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்

பழமொழி :

A wild goose never laid a tame egg

புலிக்குப் பிறந்தது பூனையாகாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

பொது அறிவு :

1. வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

 பெரியார்.

 2. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? 

 நரேந்திரர்.

English words & meanings :

balsam - a type of flowering plant. noun. balsam blooms in varieties of colour. காசித் தும்பை. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.


நீதிக்கதை

டில்லி அரசரை வென்ற கதை

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவரை நேரில் காண விரும்பினார். அவரது திறமையையும் சோதிக்க விரும்பினார். எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். 

கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனை அழைத்து இதோ பார் ராமா! இங்கே உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் அந்த பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால், நானும் உனக்குப் பரிசு தருவேன். உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்குத் தண்டனை நிச்சயம் தெரிகிறதா! என்று எச்சரித்து அனுப்பினார். 

டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றார். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காததைக் கண்டு திகைத்தார்... யாரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்பே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தார். இந்தச் சூழ்ச்சியை எப்படியும் முறியடிப்பேன், என முடிவு செய்து கொண்டார். மறுநாள் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். பாபர் நினைத்தார், ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே, அவனுக்கு சரியான தோல்வி என மகிழ்ந்தார். 

ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்றார். பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார். 

நான் நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன். இதை அவர் மிகவும் சிரமப்பட்டுக் கூறினார். ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? என்று சிரித்தார். 

அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?

எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன். ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி. உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். அரசே!  எல்லோருக்கும் மரத்தில் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே! பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. 

ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், அரசே! இந்த மாங்கனிகள் பழுத்தப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது என்றார். 

நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர். என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். 

சற்று நிற்க முடியுமா அரசே? என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்துவிட்டு தெனாலிராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?

தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம், நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும். 

தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம் என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார். 

வெற்றியுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர். 

நீதி :
மன உறுதியுடன் எந்த காரியத்தைச் செய்தாலும் நிச்சயம் அது நமக்கு வெற்றியைத் தரும்.

இன்றைய செய்திகள்

27.02. 2023

* தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், டான்சீட் திட்டத்தின் மூலம் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* சரியும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்: பில்லூர் திட்டத்தில் கூடுதல் குடிநீர் எடுத்து விநியோகிக்கும் கோவை மாநகராட்சி.

* சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்திய கல்வி முறையை வலுப்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

* தென்சீன கடல் பகுதியில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்தோனேஷியா சென்றது இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் சிந்துகேசரி.

* உலக வங்கி தலைவராக இந்தியர்  அஜய் பங்கா   நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

* பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டி: ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்.

* சர்வதேச ஜூனியர் பெண்கள் ஹாக்கி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'.

* துபாய் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'.

Today's Headlines

* Government of Tamil Nadu has announced that the startups can apply for grant funds through Tanseed scheme.

* Collapsing Siruvani Dam Water Level: Coimbatore to take and distribute additional drinking water in Pillur project.

* Chennai: Chance of light rain in delta and south coastal districts of Tamil Nadu on 27th and 28th: ​​Chennai Meteorological Department informs.

 * More allocation in budget to strengthen Indian education system - PM Narendra Modi proud.

 * India's submersible ship INS Sindhukesari went to Indonesia amid the ongoing dispute in the South China Sea.

 * Appointment of Indian Ajay Panka as President of World Bank - Announcement by US President Joe Biden.

* National Open Chess Tournament in France: Erode Grand Master Inian Champion.

 * International Junior Women's Hockey: India-South Africa makes Draw.

 * Dubai Open Tennis: Czech Republic's Krejcikova got 'Champion'


 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive