![]() |
| செளரவ் கங்குலி |
Every cloud has a silver lining.
துன்பத்திற்குப் பிறகு நன்மை வரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
ஆண்களும்,பெண்களும் ஒழுக்கத்தில் நம்பிக்கை கொள்வது, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை - லாண்டார்.
பொது அறிவு :
1. இந்தியாவிலிருந்து முதன் முதலில் அண்டார்டிகாவிற்கு சென்ற இரு பெண் விஞ்ஞானிகள் யாவர்?
அதிதி பந்த்(Aditi pant) Dr.சுதிப்தாசென்குப்தா (Sudipta Sengupta)
02. உலகின் மிக நீளமான தொங்கு பாலம் எங்கு உள்ளது?
கானாக்கலே பாலம் -துருக்கி
Canakkale Bridge- Turkey
English words :
broadcast – to send out radio or television programmes. ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு.
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.
ஜூலை 08
நீதிக்கதை
ஒற்றுமையே பலமாம்
ஒரு காலத்துல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு.
அவருக்கு மூணு மகன்கள்.
அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.
அந்த வியாபாரி எவ்வளவு முயர்ச்சி செஞ்சும் அவுங்கள ஒன்னு சேக்க முடியல.
ஒருநாள் அந்த வியாபாரி மூணு மகன்களையும் கூப்பிட்டாரு.
உங்களுக்கு ஒரு போட்டி இந்த கரும்பு கட்ட பிரிச்சி எல்லா கரும்பையும் ரெண்டா உடைக்கணும்னு சொன்னாரு.
இதைக்கேட்ட மூணுபேரும் வேக வேகமா உடைக்க ஆரம்பிச்சாங்க.
மூணுபேரும் ரொம்ப சுலபமா அந்த கரும்புங்கள உடைச்சாங்க.
உடைச்சு முடிச்சு அவுங்களுக்குள்ள யார் பலசாலின்னு மீண்டும் சண்டை வந்துச்சு.
இத பாத்த அந்த வியாபாரி போட்டி இன்னும் முடியல.
இப்ப அந்த கரும்பு கட்ட பிரிக்காம யாரு முழுசா உடைக்க முடியும்னு கேட்டாரு.
மூணு மகன்களும் முயற்சி பண்ணி பாத்தாங்க.
கரும்பு பிரிச்சி உடைக்க வேகமா உடைக்க முடிஞ்சது.
ஆனா இப்போ முடியலன்னு ரொம்ப வறுத்த பட்டாங்க.
அப்பத்தான் அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சாரு.
பாத்திங்களா நீங்களும் இந்த கரும்பு மாதிரிதான்,
தனி தனியா இருந்தீங்கன்னா உடைஞ்சி போயிடுவீங்க.
ஆனா மொத்தமா கட்டா இருந்தீங்கன்னா உடையாம பலமா இருப்பீங்க.
ஒற்றுமையே பலம்னு சொல்லி மூணு மகன் களையும் ஒண்ணா நட்பா இருக்க சொன்னாரு.
இதைக்கேட்ட அந்த மூணு பேரும் இத்தனை நாளா தனி தனியா இருந்தத.
நினைச்சு வருத்தப்பட்டாங்க.
பழமொழி : ஒற்றுமையே பலமாம் .
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...