பார்வை 1 - ல் காணும் கடிதத்தின்படி , 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கியுள்ள திறன் மாணவர்களுக்கென முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா 1 மாதிரி வினாத்தாள் மற்றும் 2 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே , தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கும் பணிமனை 08.09.2025 முதல் 12.09.2025 முடிய ஐந்து ( 05 ) வேலை நாட்களில் நடத்திட ஆணை வழங்கப்படுகிறது .08.09.2025 அன்று இதன்படி , இணைப்பு ( 1 ) ல் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த ஆசிரியர்கள் முதல்வர்கள் நடைபெறும் பணிமனையில் கலந்துகொள்ள அறிவுறத்தப்படுகிறார்கள் . எனவே , சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவிக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , திறன் முதல் பருவம் / காலாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பக்கவடிவமைப்பு செய்யும் பணியினை 03 Layout பணியாளர்களைக் கொண்டு 10.09.2025 முதல் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...