இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:487
குறள்:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்:
அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்
No man can serve two masters
ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.
பொன்மொழி :
“இளையோரின் தனித்திறமைதான் நாட்டின் மறைந்திருக்கும் பெரும் செல்வம்.”
Thought for the Day :
“The best investment a young person can make is in learning useful skills.”
பொது அறிவு :
1.புதிய 2000 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
மங்கள்யான்.
2.புதிய 500 ரூபாய் நோட்டில் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
ரெட் ஃபோர்ட் ( டில்லி) .
English words :
1. Candid – Truthful and straightforward, வெளிப்படையானவர்.
2. Magnanimous – Very generous and forgiving, பெருந்தன்மையானவர்
புவியியலும் சுற்றுசூழலும் :
"விவசாயத்திற்கு முக்கியத்துவம்
இந்திய கிராமங்களின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."
NMMS :
SAT
பின்வரும் நிகழ்வுகளைக் காலக் கிரமப்படி வரிசைப்படுத்துக.
(i) ஆம்பூர் போர்
(ii) பிளாசிப் போர்
(iii) வந்தவாசிப் போர்
(iv) பெரும் புரட்சி
(1) (i), (ii), (iii), (iv)
(2) (i), (iv), (iii) , (ii)
(3) (iii), (ii), (i), (iv)
(4) (iii), (iv), (i), (ii)
விடை: (1) (i), (ii), (iii), (iv)
செப்டம்பர் 03
நீதிக்கதை
“சிறிது ஓய்வு… நிறைய வெற்றி!”
ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தினமும் இடை விடாமல் படித்துக்கொண்டே இருந்தான்.
“இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்… ஓய்வு எடுத்தால் நேரம் வீணாகிவிடும்!” என்று நினைத்து, விளையாடுவதையும் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தான்.
சில நாட்களில் அவனுக்கு படித்தது எதுவும் சரியாக நினைவில் நிற்கவில்லை .
சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்பட்டது. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து,
“விக்னேஷ், மனதுக்கும் உடலைப் போலவே ஓய்வு தே வை . தொடர்ந்து படிப்பது மட்டும் வெற்றியைத் தராது. சிறிது நேரம் ஓய்வெ டுத்து, இயற்கை யை ரசித்து, பிடித்த விஷயங்களைச் செய்வதும் அவசியம்,” என்றார்.
அன்று மாலை விக்னேஷ் புத்தகங்களை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியே சென்று நடந்தான். நண்பர்களுடன் விளை யாடினான். வீட்டிற்கு வந்துஅமை தியாக இரவு உணவு சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கினான்.
மறுநாள் காலை அவன் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. படித்த பாடங்கள் எளிதாக நினைவுக்கு வந்தன. அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:
“ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான தயாரிப்பு.” அதன்பிறகு விக்னேஷ் படிப்புக்கும் ஓய்வுக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியாகப் படிக்கத் தொடங்கினான்.
🌸 நீதி:
அதிகமாக கவலைப்படாமல், தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்தால் மனம் புத்துணர்ச்சி பெறும். மன அமைதியுடன் செயல்படும்போது வெற்றியும் எளிதாக கிடை க்கும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...